சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
இந்த நான்கு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து பரவலாக மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பருவமழை முன்னேற்பாடுகள்: டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
இந்த மழையால் சாலைகளில் நீர் தேங்கவோ அல்லது போக்குவரத்து நெரிசல் ஏற்படவோ வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பயணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


