தமிழ்நாடு

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

top-news

தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 9, வியாழக்கிழமை) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கான காரணம்:

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், குமரிக்கடல் பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சியும் நிலவுகிறது. இந்த வானிலை அமைப்புகளின் காரணமாகத் தமிழகத்தில் மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

கனமழைக்கான மாவட்டங்கள்:

இந்தச் சூழலால், இன்று தமிழகத்தில் பின்வரும் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது:

கோவை மாவட்ட மலைப்பகுதிகள்

நீலகிரி

ஈரோடு

தருமபுரி

கிருஷ்ணகிரி

திருப்பத்தூர்

வேலூர்

ராணிப்பேட்டை

காஞ்சிபுரம்

திருவள்ளூர்

மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள மக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.